சென்னை-திருச்சி
தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் இருந்து 10ஆவது கி.மீ.இல், தென்பெண்ணையாற்றின் தெற்கில்
அமைந்துள்ள கிராமம்.
என் தாயார்
பிறந்த ஊர். சிறுவயதில் ஒவ்வொரு விடுமுறைக்கும் இங்குச் சென்று விடுவேன். பின்னர்
அங்கிருந்து என்னை விழுப்புரம் அழைத்து வருவதற்கு படாத பாடுபடுவார்கள் என்
பெற்றோர்.
பம்ப்
செட்டுகள், மாட்டுப் பொங்கல், ஆற்றுத் திருவிழா, தெருக்கூத்து, தாத்தா வீரபத்திரப்
படையாட்சி சொல்லும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” வாழ்த்து இன்னமும் மறக்க முடியல. அது
ஒரு கனாக் காலம்தான்!
இப்போது
தென்பெண்ணையாற்றில் ஓடிவிளையாட மணலும் இல்லை. மீன் பிடித்து மகிழத் தண்ணீரும்
இல்லை. அதுபோல் என் உறவுகளும் யாரும் அங்கில்லை.
ஆனால் பேரங்கியூருக்கான
வரலாறு இருக்கிறதே.
அந்த
வரலாற்றைச் சொல்லும், பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட திருமூலநாதர் கோயில்
இன்றும் நின்றுள்ளது.
இக்கோயிலில்
உள்ள கல்வெட்டுகள் இந்த ஊரை பேரங்கூர், பேரிங்கூர் என்று குறிக்கின்றன.
முதலாம்
இராஜேந்திரனின் கல்வெட்டு “இராஜேந்திர சோழ வளநாட்டில் திருமுனைப் பாடி நாட்டில்,
பேரிங்கூர் பிரமதேயம் அமைந்திருக்கிறது” என்கிறது.
திருமூலநாதர் கோயிலின் அடிப்பகுதி
கல்லாலும், மேல்பகுதி செங்கல் மற்றும் சுதையால் கட்டப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.
கோயில் கருவறையின் மேற்குச் சுவற்றில்
அளவுகோல் ஒன்று காட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 3.65செ.மீ. இது, முதலாம் இராஜராஜன் காலத்தில் பொது அளவுகோலாக
பயன்பாட்டில் இருந்துள்ளது.
திருமூலநாதர்
கோயிலின் திருச்சுற்றில் உள்ள விநாயகர் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.
பொதுவாக
சிவபெருமான்தான் கையில் மான் ஏந்தியிருப்பார்.
ஆனால் இங்குள்ள விநாயகர்
மான் ஏந்தி இருப்பது தனிச் சிறப்பிற்குரியது என்கின்ற னர் ஆய்வாளர் பெருமக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக